Magic Stone 1
மந்திரக்கல் 1 “வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று”. வானவில்லின் ஆதி மற்றும் அந்தத்தை கணிக்க முடியாதது போல், இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான பிறப்பின் தன்மை மற்றும் நோக்கத்தையும் அவர்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது. சரியான நேரம் வரும் போது, மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரையும் அவர்கள் பிறந்த கடமையைச் செய்வதற்கான வழி நோக்கி வழிகாட்டுவார் இறைவன். அதுவரை அவர் திருவடி வணங்கி வாழ்தல் சாலச்சிறந்தது என்கிறது நாலடியார். தங்களின் பிறப்பிற்கான காரணம் அறிந்துகொண்ட மனிதர்கள் அனைவரும் அதை நிறைவேற்ற நினைக்கிறார்களா என்றால் இல்லை. சிலர் நிறைவேற்ற நினைத்தாலும் விதி அதற்கு விடுவதில்லை. விதி, சதி அனைத்தையும் உடைத்து எறிந்து சொற்பமான நபர்கள் தான் தாங்கள் பிறப்பெடுத்த இலட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள். அப்படியான ஐந்து நபர்களின் கதையே இந்த “மந்திரக்கற்கள்”. காக்கைக் கூட்டில் பிறந்து வளர்ந்து, முதல்முறையாகத் தன் குட்டி வாயைத் திறந்து இனிய குரலால் கூவி
கருத்துகள்
கருத்துரையிடுக